/* */

216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டை அருகே 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கினார்

HIGHLIGHTS

216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர்கள்
X

விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகளை வழங்கிய அமைச்சர்கள் எஸ்.ரகுபதி , சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா ஆகியோர்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், அறந்தாங்கி கோட்ட அளவில் 177 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களையும், 20 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான ஆணைகளையும் மற்றும் 19 பயனாளிகளுக்கு கிராம கணக்குகளில் பதிவின்றி இருந்த விலையில்லா வீட்டுமனை பட்டாக்களுக்கு சிட்டா,

அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகளையும் என மொத்தம் 216 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் மற்றும் சிட்டா, அடங்கல் ஆகியவற்றிற்கான ஆணைகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று (28.12.2023) வழங்கினார்கள்.

பின்னர் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்வதே மக்களாட்சியின் தத்துவமாகும். அதனடிப்படையில் இருப்பிடத்தின் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அதிக அளவிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி முத்திரை பதித்து வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் மற்ற மாநிலங்களும், தங்களது மாநிலங்களில் செயல்படத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் அனைவருக்கும் இன்று வழங்கப்பட்டுள்ள விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை பெற்று தங்களது வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏழை, எளிய குடும்பங்களில் ஒளியேற்றி வைக்கும் வகையில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கி வருகிறார்கள். இதன்மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முறையாக பெற்று பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ‘மக்களுடன் முதல்வர்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலம் அரசுத்துறைகளின் சேவைகளை பெற பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் மூலம் மனுக்களை அளித்து பயன்பெறவும், இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பெற்ற பயனாளிகள் அனைவரும் உரிய முறையில் இதனை பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

பின்னர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் , துவரடிமனை பகுதியில், பகுதிநேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார். இதன்மூலம் இப்பகுதி பொதுமக்கள் குடிமைப் பொருட்கள் பெறுவதற்கு நீண்ட தூரம் சென்று வருவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் தி.முத்து (எ) சுப்ரமணியன், வட்டாட்சியர்கள் ஜபருல்லா (அறந்தாங்கி), சேக் அப்துல்லா (மணமேல்குடி), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்,

Updated On: 28 Dec 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது