/* */

வல்லத்திராக்கோட்டையில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் உண்ணாவிரதம்

அதிகாரிகளை கண்டித்து, வல்லத்திராக்கோட்டையில் வாயில் கருப்புத்துணி கட்டி, ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

வல்லத்திராக்கோட்டையில் ஊராட்சி தலைவர், உறுப்பினர்கள் உண்ணாவிரதம்
X

அரசு அதிகாரிகளை கண்டித்து, வல்லாத்திராக்கோட்டை பேருந்து நிலையம் அருகே, உண்ணாவிரதம் இருந்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லத்திராக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக கன்சல் பேகம் தலைவராக இருந்து வருகிறார். வல்லத்திராக்கோட்டை ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளுக்காக அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றுவது கிடையாது. மற்ற ஊராட்சிகளில் பல்வேறு பணிகளை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள் வல்லத்திராக்கோட்டை ஊராட்சியை புறக்கணித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல ஊராட்சி மன்ற தலைவரை அரசு நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் அழைப்பதில்லை வல்லத்திராக்கோட்டை ஊராட்சியை அரசு அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால்பொதுமக்கள் கூறும் எந்த பணிகளையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்று, ஊராட்சி தலைவரும், உறுப்பினர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன், அரசு அதிகாரிகளின் போக்கை கண்டித்து, இன்று வல்லத்திராக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் கன்சல் பேகம், துணைத் தலைவர் ஆறுமுகம் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இது, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக, வல்லத்திராக்கோட்டை ஊராட்சி விஷயத்தில், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி, வளர்ச்சிப்பணிகள், மக்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று, ஊராட்சி சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Updated On: 17 Sep 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  2. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  3. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  5. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  6. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  8. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  9. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  10. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...