/* */

புதுக்கோட்டை நகர பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை நகரத்தில் மழைநீர் தேங்கியிருந்த பல்வேறு இடங்களுக்கும் சென்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் நேற்று பலத்த வெயில் அடித்தாலும் மாலை நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையினால் புதுக்கோட்டை திருக்கட்டளை, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் பெரும் துயரம் அடைந்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட அமைச்சர் உடனடியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று தேங்கி நின்ற மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டு, மழையால் பாதித்த பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

புதுக்கோட்டை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படுவதை கேள்விப்பட்டு உடனடியாக ஆய்வு பணியை மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன் செயலுக்கு அப்பகுதியில் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

Updated On: 17 Nov 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது