/* */

24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் "காவலர் பீட்" துவக்கம்

காவலர்கள் இருசக்கர வாகனத்தில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் "காவலர் பீட்" முறையை பெரம்பலூரில் டிஐஜி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் இருசக்கர வாகனத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் காவலர் பீட் முறையை பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவகத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

9 இருசக்கர வாகனங்கள் காவலர்கள் சுழற்சிமுறையில் இரவு பகல் என 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவர். இவர்களை வழக்கமான 100 எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும் காவல் நிலையம் போகாமல் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களிடம் புகார்களை தெரிவித்தாலும் புகார் தொடர்பான விசாரணையை மேற்கொள்வார்கள். மேலும் குற்றங்களை தடுக்கும் வகையிலும் பொதுமக்களுடன் நட்புறவு ஏற்படுத்தும் வகையிலும் காவலர் பீட் என்ற முறை தற்போது நடை முறைப்படுத்த படுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம், பெரம்பலூர் சரக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சிவ்குமார், மங்கலமேடு சரக துணை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட காவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 4 Oct 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!