/* */

பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

மருதையாற்று வெள்ளத்தினால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு  தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
X

மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை விட்டு விட்டுமழைபெய்து வருகிறது.இதனிடையே மருதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததால் மருதையாற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.ஏற்கனவே பெய்த மழையில் கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பிவிட்டதால் தற்போதுசெல்லும் நீர் உபரிநீர் போக்கிவழியாக அப்படியே வெளியேறிவருகிறது.

சுமார் 4500 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் இருகரையோர மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் ஆற்றை கடக்கவோ,அருகில் செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் தண்டோராமூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இதனிடையே மருதையாறு நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 5:40 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்