/* */

பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு கொசு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு கொசு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற டெங்கு கொசு விழிப்புணர்வு பேரணி
X

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு கொசுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கியும், டெங்கு வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் படி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் 62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய இந்த பேரணிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் நெப்போலியன்,துணை முதல்வர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பாலக்கரையில் ஆரம்பித்து, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம் ,காமராஜ் ஆர்ச் வரை சென்று ரோவர் மருந்தியல் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ,மாணவிகள் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டபடி சென்றனர்.

இந்த பேரணி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. பேரணியில் தாசில்தார் சரவணன் மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2023 5:10 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...