Begin typing your search above and press return to search.
பெண் காவலர் படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
டெல்லியில் பெண் காவலர் சபியா சைபி படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில், டெல்லியில் பெண் காவலர் சபியா சைஃபி படுகொலை சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தலைமை கழக பேச்சாளர் நாசர் அலி கான் கண்டன உரையாற்றினார். காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க பொறுப்பாளர் கலையரசி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட குதரத்துல்லாஹ், மனித நேய மக்கள் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மீரா மொய்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.