/* */

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தாயும், சேயும் இறந்ததால் பரபரப்பு
X

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை (பைல்படம்).

பெரம்பலூர் அருகே உள்ள சின்னபரவாய் கிராமத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி.இவரது மனைவி மகாலட்சுமி(19)நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோனை செய்த மருத்துவர்கள் மகாலட்சுமியை ,பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்துள்ளனர்.அதன்படி மகாலட்சுமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது.வயிற்றில் இருந்த பெண்குழந்தை இறந்த நிலையில் எடுக்கப்பட்டது.பின்னர் சிறிது நேரத்தில் மகாலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக மகாலட்சுமியின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 Dec 2021 3:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  2. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  3. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  4. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  6. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  8. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  9. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்