/* */

குரும்பலூர் அருகே 80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி

குரும்பலூர் பேருராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, ஓடை நீரில் மூழ்கி பலியானார்.

HIGHLIGHTS

குரும்பலூர் அருகே  80 வயது மூதாட்டி ஓடை நீரில் மூழ்கி பலி
X

மூதாட்சி இறந்தது குறித்து விசாரித்த கிராமத்தினர். 

பெரம்பலூர் அடுத்துள்ள குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவர், நல்லம்மாள், வயது 80, இவரது கணவர் சுப்பு. இவர் இறந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில், இவர்களுக்கு பிள்ளைகள் யாரும் இல்லை. நல்லம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக நல்லம்மாளை காணவில்லை. அருகே இருந்தவர்கள் தேடிப்பார்த்து விசாரித்து வந்த நிலையில், அதே பாளையம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் ஓடை பகுதியில், பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியான நல்லம்மாள் என்பது தெரியவந்தது. நல்லம்மாள் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மூதாட்டி உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  5. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  6. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  7. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  8. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  9. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  10. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...