/* */

உதகை அருகே நாம்தமிழர் கட்சியில் இணைந்த கிராம மக்கள்

உதகை அருகே அடிப்படை வசதிகளை மீட்டெடுப்பதற்காக கிராம மக்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

HIGHLIGHTS

உதகை அருகே நாம்தமிழர் கட்சியில் இணைந்த கிராம மக்கள்
X

உதகை அருகே ஆல்காடு நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை மீட்டெடுப்பதற்காக கிராமமக்கள் நாம்தமிழர் கட்சியில் இணைந்தனர்.

உதகை அருகே உள்ள உல்லத்தி பேரூராட்சிக்குட்பட்ட ஆல்காடு நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். இப்பகுதியில் உள்ள சுமார் 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதுவரை இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையில் பல கட்சியினர் தங்கள் கிராமத்தை புறக்கணித்து வருவதாகவும் தங்களுக்கான அடிப்படைகளை மீட்டெடுக்க கட்சியில் இணைந்ததாக கிராம இளைஞர்கள் தெரிவித்தனர்.

இந்த கிராமத்தில் குடிநீர், நடைபாதை, தெருவிளக்கு, தடுப்புச்சுவர் உள்ளிட்ட முக்கிய அடிப்படை தேவைகளை நாம் தமிழர் கட்சியில் இணைந்து பொதுமக்களுக்கான சேவைகளை பெற்று தருவதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அனைவருக்கும் விவசாயிகளின் அடையாளமாக உள்ள பச்சை துண்டு அணிவித்து நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதில் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஜெயகுமார், நகர செயலாளர் செல்வம், ரவி, மற்றும் ஆல்காடு நகர் பொறுப்பாளர் விக்னேஸ்வரன், செயலாளர் ஆனந்தன், செய்தி தொடர்பாளர் மகேந்திர ராஜ், மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து