/* */

உதகையில் அனுமதியின்றி பாறைகள் உடைப்பு: போலீசார் வழக்கு பதிவு

உதகையில் அனுமதியின்றி பாறைகளை உடைத்த விவசாயி மீது புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

HIGHLIGHTS

உதகையில் அனுமதியின்றி பாறைகள் உடைப்பு: போலீசார் வழக்கு பதிவு
X

ஊட்டியில் அனுமதியின்றி உடைக்கப்பட்ட பாறைகள்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாறைகள் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணியின் போது பாறைகளை உடைக்க வருவாய் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஊட்டி தாலுக்காவுக்கு உட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் பட்டா நிலம் மற்றும் அரசு நிலத்தில் தடையை மீறி பாறைகள் உடைக்கப்பட்டதாக புகார் வந்தது.

உதகை ஊரக கிராம நிர்வாக அலுவலர் பிரீத்தா தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது, பாறைகள் வெடிமருந்து பயன்படுத்தி கள்ளத்தனமாக 2,500 கற்கள் உடைக்கப்பட்டு மலைச்சரிவில் வாகனங்கள் செல்ல முன் அனுமதியின்றி மண் சாலையில் கற்களால் பாதை அமைக்கப்பட்டிருந்தது.

வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் பட்டா நில உரிமையாளர் கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த கோபால் அனுமதியின்றி பாறைகளை உடைத்து அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பிரீத்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊட்டி புதுமந்து போலீசார் விவசாயி கோபால் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 23 Jan 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்