/* */

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது: கலெக்டரிடம் மனு

டிச 22ம் தேதி ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது என மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது: கலெக்டரிடம் மனு
X

பைல் படம். 

நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடும் வகையில் வருகிற 22-ந் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரியில் ஹெத்தையம்மன் விழாவின் போது மது, மாமிசம் பயன்படுத்துவது இல்லை. இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம். தனி சிறப்பு வாய்ந்த விழாவின்போது அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததை சுட்டிக் காட்டுகிறோம்.

நீலகிரி மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு வருகிற 22-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Updated On: 17 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!