/* */

நீலகிரி மாவட்டத்தில் நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் நாளை வாக்குச்சாவடிகள் குறித்து கருத்து கேட்பு கூட்டம்
X

நீலகிரி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது.

தேர்தலுக்காக நீலகிரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளை இறுதி செய்வது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பொருட்டு ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Nov 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...