Begin typing your search above and press return to search.
தேசிய விடுமுறை நாளான இன்று அதிகாரிகள் ஆய்வு
28 கடை நிறுவனங்கள், 67 உணவு நிறுவனங்கள், 52 தோட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை நாளை முன்னிட்டு 1958-ம் ஆண்டு தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதா என்று தொழிலாளர் உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர். 28 கடை நிறுவனங்கள், 67 உணவு நிறுவனங்கள், 52 தோட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14 கடை நிறுவனங்கள், 35 உணவு நிறுவனங்கள், 16 தோட்ட நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.