/* */

உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதி தடையை நீக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்ததுடன், அது சட்ட விரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினால் வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் பழங்குடியினர் மற்றும் வனத்துறை சார்ந்த வாழ்ந்து வருகின்ற பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தீர்ப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, உதகை ஆட்சியர் அலுவலகம் அருகே, விவசாயிகள் சங்கம் மற்றும் பழங்குடியினர், இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திடீரென தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக, பாடல்கள் மூலம் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் சம்பவ பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தியவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர் இதனால் மூன்று மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டமானது கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் உதகையில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 28 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு