/* */

உதகை அருகே நிலத்தில் கஞ்சா வளர்த்த 3 பேர் கைது: செடிகள் பறிமுதல்

உதகை அருகே பட்டா நிலத்தில் கஞ்சா பயிரிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

உதகை அருகே நிலத்தில் கஞ்சா வளர்த்த 3 பேர் கைது: செடிகள் பறிமுதல்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டம், கல்லட்டியில் இருந்து உதகையை நோக்கி இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் தலைகுந்தா சோதனைச்சாவடியில் வந்து கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கல்லட்டியில் பயிரிட்ட கஞ்சா செடிகளை பறித்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை பிடித்து கல்லட்டி 6-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு சென்றனர்.

அங்கு கல்லட்டியை சேர்ந்த விவசாயியான குணசேகரன் (வயது 56) தனது பட்டா நிலத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்தது தெரியவந்தது. போலீசார் கஞ்சா செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

புதுமந்து போலீசார் குணசேகரன், உதகை அருகே தாவணெ கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், கூடலூரை சேர்ந்த விஷ்ணு (19) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

குணசேகரன், விஷ்ணு ஆகிய 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

Updated On: 11 Nov 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...