Begin typing your search above and press return to search.
உதகை பைக்காரா அணையிலிருந்து 150 கன அடி நீர் வெளியேற்றம்
உதகை பைக்காரா அணை நிரம்பியதால் பாதுகாப்பு கருதி மதகுகளிலிருந்து 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
உதகை அருகே உள்ள பைக்காரா அணையின் 100 அடி கொள்ளவில் 90 அடி நீர் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி மதகுகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 13 அணைகள் உள்ளன கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இந்த அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. குறிப்பாக குந்தா, காமராஜர் சாகர், பைக்காரா உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன.
இதையடுத்து 100 அடியை கொண்ட பைக்காரா அணை 90 அடியை தொட்டுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகளிலும் சுமார் வினாடிக்கு 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அணைகள் உள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.