/* */

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

கொட்டும் மழையில் உதகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்.

தமிழக அரசு அறிவித்த ஊக்க ஊதியம், அனைத்து கிராம, பகுதி சுகாதார செவிலியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய நல சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில், உதகை கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பு மாநில செயலாளர் கோவிந்தம்மாள், மாவட்ட தலைவர் லோகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் நியமனம் கருத்துருவை கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

கொட்டும் மழையில் செவிலியர்கள் குடைகளை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.

Updated On: 19 Nov 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்