/* */

ஆன்லைனில் ஐ.நா.சபையில் பேச்சு: கோத்தகிரி மாணவரை பாராட்டிய கலெக்டர்

ஆன்லைன் மூலம் ஐ.நா.சபையில் உரையாற்றிய கோத்தகிரி மாணவரை, நீலகிரி கலெக்டர் பாராட்டினார்.

HIGHLIGHTS

ஆன்லைனில் ஐ.நா.சபையில் பேச்சு: கோத்தகிரி மாணவரை பாராட்டிய கலெக்டர்
X

ஆன்லைனில் ஐ.நா. சபையில் பேசிய  மாணவர் ராகுலை பாராட்டிய நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, கேர்கம்பை அரசு உயர்நிலைப் பள்ளியில், காக்காசோலை கிராமத்தை சேர்ந்த மாணவர் ராகுல் (வயது 13) 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில், ஐ.நா. சபையில் ஆன்லைன் மூலம் உரை நிகழ்த்தும் வாய்ப்பு, மாணவர் ராகுலுக்கு கிடைத்தது.

தனது உரையில், சுற்றுச்சூழல் சார்ந்த குழந்தைகளின் உரிமைகள் குறித்து, ராகுல் எடுத்துரைத்தார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும், ஆங்கிலத்தில் பேசினார். ஐ.நா. சபையில் பேசி, நீலகிரிக்கு பெருமை தேடித்தந்த மாணவர் ராகுலை, குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.

இதை தொடர்ந்து, தற்போது நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை, இன்று சந்தித்து மாணவர் ராகுல் வாழ்த்து பெற்றார். அவரை கலெக்டர் பாராட்டி ஊக்குவித்தார். இந்த நிகழ்வின் போது ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Updated On: 4 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது