/* */

குன்னூரில் 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட கார்: மூவர் படுகாயம்

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குன்னூரில் 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட கார்: மூவர் படுகாயம்
X

குன்னூர் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட கார்.

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் 21 இடங்களில் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி சாலையின் இருபுறமும் ஜல்லிகற்கள் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றன. இந்த நிலையில் பாய்ஸ் கம்பெனி பகுதியை சேர்ந்த கண்ணன் உதகை மகளிர் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று கண்ணன் மற்றும் அவரது மனைவி ஒட்டுநர் உட்பட 3 பேர் குன்னூரிலிருந்து காரமடைக்கு சொகுசு காரில் செல்லும்போது வளைவில் திருப்பும் போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து தூக்கி வீசப்பட்டு வனப்பகுதியை தாண்டி 200 அடியை தாண்டி ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது.

இதில் மூவர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத்துறையின் மீட்டு குன்னூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 April 2022 3:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!