/* */

மசினகுடி மசினியம்மன் கோவிலில் தசரா திருவிழா

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அடுத்த மசினகுடியில் மசினியம்மன் கோவில் மிகவும் புராதன தலம் ஆகும்.

HIGHLIGHTS

மசினகுடி மசினியம்மன் கோவிலில் தசரா திருவிழா
X

மசினகுடி மசினியம்மன் தசரா கொண்டாட்டம் 

இஸ்லாமியர் ஆட்சிக்காலத்தில் மைசூருவைச் சேர்ந்த வியாபாரிகள் சிலர், திப்புவின் அராஜகம் தாங்க முடியாமல் இப்பகுதியில் குடியேறினர். அப்போது அவர்கள் தங்களின் குலதெ ய்வம் மசினி அம்மனை நேரில் சென்று வழிபட முடியாத காரணத்தால், தாங்கள் வசிக்கும் பகுதியில் மசினியம்மனுக்கு கோயில் எழுப்பினர். அங்கு அவர்கள் அம்மனை சிறப்பாக வழிபட்டு வருகின்றனர்.

கோவில் கருவறையில் 4 அடி உயரம், 2 அடி அகலம் உடைய அம்மன் சிலை உள்ளது. மேலும் தொட்டம்மன், மசினியம்மனின் சகோதரிகளான மாயார் சிக்கம்மன், பொக்காபுரம் மாரியம்மன், சிறியூர் மாரியம்மன், ஆணிகல் மாரிய ம்மன், சொக்கனல்லி மாரியம்மன், தண்டு மாரியம்மன் ஆகிய சிலைகள், கருவறையைச் சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அங்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் அமாவாசை ஆகிய நாட்களில் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கிறது. மேலும் ஞாயிறு மட்டும் பூசாரியின் பாதுகாப்பில் கோவில் வளாகம் இருக்கும். அப்போது ஐம்பொன் உற்சவர் அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்படும். இதற்கான பூஜை நடக்கும்போது அம்மனின் தலையில் சூடியுள்ள பூக்கள் வலதுபுறம் கீழே விழுந்தால் பக்தர்களின் வேண்டு தலை நிறைவேற்ற உத்தரவு கிடைத்து விட்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மசினக்குடி அம்மன் கோவிலிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் மைசூரு தசரா ஆகிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மசினியம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது .அப்போது மாயார் சிக்கம்மன் கோவில் இருந்து அம்மன் சிலையை பழங்குடி மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, மசியம்மன் கோவிலை சென்றடைவர். தொடர்ந்து நடக்கும் திருத்தேர் முக்கிய சாலைகள் வழியாக செல்லும்.

அன்றைய தினம் ஊட்டி சாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து பக்தர்களின் ஆரவாரத்துடன் புறப்படும் தேர் கடைசியாக நிலையை வந்தடையும்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாட ப்படும். அப்போது மசினியம்மன் கோவிலிலும் தசரா பண்டிகை நடக்கும். மசினக்குடி அம்மன் கோவிலில் தற்போது தசரா கொலு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மசினகுடியில் நடந்த தசரா விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமியை கண்குளிர கண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

மேலும் மசினகுடி மசினிய ம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தசரா கொலு திருவிழா தொடங்கியது. இதற்காக மாயார் சிக்கம்மன் கோவிலில் இருந்து சிக்கம்மனை பழ ங்குடி மக்கள் ஊர்வலமாக, மசினியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலு வைத்து, தசரா விழா தொடங்கியது.

கடைசி நாள் விழாவில் மசினி யம்மன் சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.

Updated On: 24 Oct 2023 3:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த...
  8. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  9. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  10. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது