/* */

கூடலூரில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

கூடலூர் பாடந்துறை பகுதியல் இரவில் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

HIGHLIGHTS

கூடலூரில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
X

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் 

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியது இதில் காயமடைந்த இருவர் கூடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் கடந்த ஒருவாரமாக அரிசி ராஜா என்ற காட்டு யானை குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி கோரிக்கை வைத்து வரும் நிலையில் மீண்டும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாடந்துறை கைம கொல்லி பகுதியில் இரவில் புகுந்த காட்டுயானை அங்கிருந்த இரண்டு வீடுகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை சூறையாடியது இதில் வீட்டில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர் அவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அரிசி ராஜா காட்டு யானை அதே பகுதியில் உலா வருவதால் வனத்துறையினர் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

Updated On: 29 Nov 2021 5:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  5. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  6. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  7. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  8. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  9. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  10. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...