/* */

அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை

தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது.

HIGHLIGHTS

அம்மன் கோவிலை சேதப்படுத்திய காட்டு யானை
X

சேதமடைந்த கோவில்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவாலா அட்டி பகுதியில் பாண்டியாறு அரசு தேயிலை தோட்டம் உள்ளது. இங்குள்ள தேயிலை தொழிலாளர்களால் கட்டப்பட்ட அம்மன் கோவிலை மாலை நேரம் உலா வந்த 9 யானைகள் கொண்ட கூட்டம் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

கோவிலின் முன்புற கதவு மற்றும் சட்டர்களை உடைத்தும், உள்ளே இருந்த பொருட்களை இழுத்து சேதப்படுத்தியும் சென்றுள்ளன. இதேபோல் அருகே உள்ள பொன்னூர் வனப்பகுதியில் இருந்து வந்த இந்த காட்டு யானை கூட்டம் தேயிலை தோட்டத்தில் நடமாடியதோடு கோவிலையும் உடைத்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று உள்ளன.

அடிக்கடி இந்த கோவிலை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட முறை இந்த கோவிலை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளதாகவும் கோவிலை பாதுகாக்க கோவிலை சுற்றி தோட்ட நிர்வாகம் சார்பில் மின் வேலி அமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்தில் நாடுகாணி வனச்சரகர் பிரசாத் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.

Updated On: 30 Sep 2021 3:10 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி