/* */

கூடலூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலா பயணி பலி

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலா பயணி பலி
X

பலியான சுற்றுலா பயணியை மீட்க்கும் தீயணைப்பு படையினர்.

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள தொரப்பள்ளி பகுதியில் சுற்றுலாவிற்காக வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரமாக ஆற்றில் குளியலிட்ட மூவரில் ஒருவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் உடனிருந்தவர்கள் கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் ஆற்றில் இருந்து தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். போலீசார் விசாரணையில் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 3 பேர், ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது தொரப்பள்ளி ஆற்றில் 3 பேரும் குளிக்கச் சென்றனர். அப்போது, 3 பேரில் நீச்சல் தெரியாமல் வினோத் (45) என்பவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போலீசார் உயிரிழந்த உடலை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலாவிற்காக வந்த இடத்தில் குளிக்கச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்