/* */

2மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்தது: 21நாட்களாக போக்கு காட்டும் புலி

T23 புலி மயக்க ஊசி செலுத்தியும் தப்பியது, முதுமலை போஸ்பரா பகுதியிலிருந்து மீண்டும் மசினகுடி பகுதிக்குஇடம் பெயர்ந்தது.

HIGHLIGHTS

நீலகிரியில் கடந்த 21 நாட்களாக ஒட்டுமொத்த வனத்துறையினருக்கும் சிக்காமல் போக்கு காட்டி வந்த T 23 புலி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை தகவல் தெரிவித்தது.

இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டும் T 23 புலி வனத்துறையிடம் இருந்து தப்பியது இதையடுத்து இரவு முழுவதும் புலியைத் தேடி வனத்துறையினர் ஈடுபட்டனர். இதுவரை புலி சிக்காததால் வனத்துறை குழு மீண்டும் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மசினகுடி சுற்றி உள்ள கிராமப்பகுதியில் அதிகாலை முதலே வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 21 நாட்களாக வனத்துறைக்கு சிக்காமல் நேற்றிரவு மயக்க ஊசி செலுத்தியும் தப்பித்த டி23 புலியை தேடும் பணி மீண்டும் துவங்கியுள்ளது, இது கூடலூர் மற்றும் மசனகுடி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Oct 2021 9:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?