/* */

மின் கணக்கீட்டாளர் செய்த குளறுபடி: தாறுமாறாக எகிறிய கட்டணம் -அதிகாரிகள் நடவடிக்கை..!

கணக்கீட்டாளர் மீது துறை ரீதியாகபணியிடைநீக்கம் செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குசொந்த தொகையை கொடுக்க உத்தரவு.

HIGHLIGHTS

மின் கணக்கீட்டாளர் செய்த குளறுபடி:  தாறுமாறாக எகிறிய கட்டணம் -அதிகாரிகள் நடவடிக்கை..!
X

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக புதிய மின் மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தேவகி என்ற மூதாட்டிக்கு ரூபாய் 25 ஆயிரத்து 71 ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு அலைபேசியில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அந்த மூதாட்டியின் பாட்டியின் மகன் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சேரம்பாடி மின்பகிர்மான அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் கடந்த 10 நாட்களாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதேபோல் அதே பகுதியில் பத்தாயிரம் முதல் 15,000 வரை மின் கட்டணம் செலுத்துமாறு பலருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மக்கள் மின் பகிர்மான அலுவலத்திற்கு புகார் அளிக்க நேற்று வந்தனர். இதனை அடுத்து கூடலூர் கோட்ட செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பழைய மின் மீட்டர் இருந்த நிலையில் வீடுகளுக்கு செல்லாத மின் கணக்கீட்டாளர் ரமேஷ் சென்று கணக்கீடு செய்யாமல் அவரே குறைந்த அளவிலான கட்டணத்தை போட்டு அவர்களை ஏமாற்றி உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் புதிய மின் மீட்டர் பொருத்த பட்ட நிலையில் இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த அத்தனை தொகையும் வந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் தவறு செய்தது தெரியவந்த நிலையில் தவறு செய்த மின் கணக்கிட்டார் மீது துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அவர் சொந்த தொகையை கொடுக்க உத்தரவிட்டனர்.

Updated On: 22 April 2022 4:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு