/* */

திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி

திருச்செங்கோட்டில் இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவை பணியில் ஒவ்வொரு வாரமும் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

திருச்செங்கோட்டில்  இளைஞர்கள் கொரோனா தடுப்பு சேவைப்பணி
X

திருச்செங்கோட்டில் கிருமிநாசினி தெளிக்கும் இளைஞர்கள்.

திருச்செங்கோடு ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 2-வது முறையாக கிருமி நாசினி தெளிப்பு பணி செய்யப்பட்டது.

திருச்செங்கோடு ஒன்றியம், ஆனங்கூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லா கவுண்டம்பாளையம் பகத்சிங் நகரில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க, நல்லாகவுண்டம்பாளையம் கிளையின் சார்பில் நல்லகவுண்டம்பாளையத்தின் அனைத்து தெருக்கள் மற்றும் சிறு வீதிகளிலும் கடந்த வாரம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து 2வது முறையாக இன்று காலை 8 மணிக்கு கிளை தலைவர் ஜெகநாதன் தலைமையில் சமூக சேவைப்பணி தொடங்கியது. நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் மற்றும் காளியம்மன், மாரியம்மன் கோவில் பகுதியிலும், பிரதான சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கபட்டது.

வாலிபர் சங்க திருச்செங்கோடு தலைவர் கோபி, சங்கத்தின் உறுப்பினர் உதயகுமார், கார்த்தி, பிரகாஷ், ஜீவா, சஞ்சய், விக்னேஷ், விஷ்ணு ஆகியோர் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாரம் ஒரு முறை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும், இதன்மூலம் இக்கிராமத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Updated On: 23 May 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’