/* */

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இல்லம் தேடி கற்றல் கண்காட்சி

திருச்செங்கோடு கல்வி மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர் களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் இல்லம் தேடி கற்றல் கண்காட்சி
X

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் நடைபெற்ற இல்லம் தேடி கற்றல் கண்காட்சியை திரளான மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 5 குறுவள மையங்களுக்கு உட்பட்ட, 219 மையத்தில் பணியாற்றும் 219 தன்னார்வலர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இக்கண்காட்சி மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ), குறுவளமையத்தின் தலைமை ஆசிரியர்கள், பள்ளிமேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வியின் முதன்மை நோக்கமாக கற்றல் இடைவெளியை போக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கல்வி கண்காட்சியை பார்வையிட்டனர். கல்விக் கண்காட்சியில் தன்னார்வலர்கள் செய்த கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் மற்றும் மாணவர்களின் படைப்புகளும் இடம் பெற்றன.

Updated On: 28 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  2. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  3. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  4. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  5. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  6. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  7. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  8. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  9. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது