/* */

எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, இவரது 17 வயது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சேலம் தீவட்டிப்பட்டி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது தாய் காந்திமதி (37) தனது மகளை பல ஆஸ்பத்திகளுக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றும் நோய் சரியாகவில்லை.

இதனால் விரக்தியடைந்த, கவிதா சம்பவத்தன்று, வீட்டில் இருந்த எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயக்கமடைந்த அவரை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சிகிச்சைக்காக சேர்த்தனர். 2 நாள் கழித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கவிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 11 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  6. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  7. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  8. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  9. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!