/* */

எருமப்பட்டி: மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

எருமப்பட்டி அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி: மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

போலீஸ் விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பச்சமுத்து மகன் தினேஷ் (22) என்பவர் பொட்டிரெட்டிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்தபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையொட்டி, ஆத்தூர் சென்ற போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்த தினேசை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 8 April 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!