/* */

எருமப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

எருமப்பட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே தொழிலாளி  விஷம் குடித்து தற்கொலை
X

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. அவரது மகன் மணிகண்டன் (30). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 10 நாட்களுக்கு கவுசல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் பழக்கம் இருந்துள்ளது. அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இந்நிலையில், சம்பவத்தன்று மணிகண்டனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வெறுப்படைந்த அவர், தனது மாமியார் வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது மாமியார் ராணி, மனைவி கவுசல்யா ஆகியோர் மணிகண்டனை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே மணிகண்டனர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 July 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...