/* */

கார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச்சென்ற 2 போலீசார் வேன் மோதி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே விபத்தில் காயமடைந்த காரை மீட்கச்சென்ற, போலீஸ்காரர்கள் மீது டூரிஸ்ட் வேன் மோதியதால், எஸ்எஸ்ஐ உட்பட 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச்சென்ற 2 போலீசார் வேன் மோதி உயிரிழப்பு
X

இராசிபுரம் அருகே டூரிஸ்ட் வேன் மோதி இறந்த போலீஸ் எஸ்எஸ்ஐ சந்திரசேகர், போலீஸ்காரர் தேவராஜன் ஆகியோர் (பழைய படம்).

நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும், தேசிய நெடுஞ்சாலையில், ராசிபுரம் அருகில் உள்ள, அணைப்பாளையம் பிரிவு ரோட்டில், உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி செல்லும் ரோட்டில், தனியார் கல்லூரி அருகில், இடதுபுறமாக தற்காலிக சர்வீஸ் ரோடு அமைத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற தனியார் கார் ஒன்று டைவர்ஷன் ரோட்டை கவனிக்காமல் நேராகச் சென்று, டைவர்ஷன் எச்சரிக்கை பலகை மற்றும் இரும்பு டிரம்மில் மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் கிடைத்ததும், ராசிபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகன பணியில் இருந்த எஸ்எஸ்ஐ கோவிந்தன், போலீஸ்காரர் நந்தகோபால், ராசிபுரம் போலீஸ் இரவு ரோந்து பணியில் இருந்த எஸ்எஸ்ஐ தேவராஜன், புதுச்சத்திரம் போலீஸ் நிலைய எஸ்எஸ்ஐ சந்திரசேகர், போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று, விபத்துக்குள்ளன காரில் இருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக மிகவும் வேகமாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி, லாரியின் பின்புறம் நின்றுகொண்டு, அந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, திருநள்ளாரில் இருந்து, சேலம்மாவட்டம், இளம்பிள்ளை நோக்கிச் சென்ற டூரிஸ்ட் வேன் ஒன்று அவ்வழியாக வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரியின் மீது அந்த வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதானல் லாரியின் பின்பக்கத்தில் நின்றிருந்த போலீஸ்காரர் தேவராஜனுக்கு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புதுச்சத்திரம் எஸ்எஸ்ஐ சந்திரசேகர், போலீஸ்காரர் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் எஸ்எஸ்ஐ சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் மணிகண்டன் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். டூரிஸ்ட் வேனில் பயணம் செய்த 3 பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் இறந்த போலீசாரின் உடல்கள், ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில், பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Jun 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...