/* */

பரமத்தி அகதிகள் முகாமில் பெண் விஷம் குடித்து தற்கொலை: பொதுமக்கள் சாலை மறியல்

அகதிகள் முகாமில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பரமத்தி அகதிகள் முகாமில் பெண் விஷம் குடித்து  தற்கொலை: பொதுமக்கள் சாலை மறியல்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் நகுலேஸ்வரன் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்சி (33). இவர்களுக்கு பூஜா (15), சரண்யா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜான்சி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நகுலேஸ்வரன் பரமத்தி போலீஸ் ஸ்டேசனிலில் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுவுகிறது. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஜான்சி இறப்பு குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 16 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...