/* */

பொத்தனூரில் 'கல்வி எனது கனவு' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை

பொத்தனூரில், கல்வி எனது கனவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பொத்தனூரில் கல்வி எனது கனவு திட்டத்தின் கீழ்  மாணவர்களுக்கு உதவித்தொகை
X

பொத்தனூரில் கல்வி எனது கனவுத்திட்டத்தின் கீழ்,  மாணவர்களுக்கு உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள, பொத்தனூர் வேர்டு நிறுவனம் மற்றும் சென்னை சோழமண்டலம் நிதி நிறுவனங்கள் இணைந்து கல்வி எனது கனவு என் திட்டத்தின்கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழமண்டலம் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் திட்ட மேலாளர் கீதாதேவி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கந்தசாமி கண்டர் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் லோகநாதன், வேர்டு நிறுவன ஆலோசகர் ராதா சீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள்.

மாவட்ட அளவில் 3வது ஆண்டாக, லாரி டிரைவர்களின் குழந்தைகள் மற்றும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. முன்னதாக வேர்டு நிறுவன செயலர் சிவகாமவல்லி வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா நன்றி கூறினார்.

Updated On: 16 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!