/* */

ஏலச்சந்தையில் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!

பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில் வெல்லம் விலை உயர்வால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

ஏலச்சந்தையில் வெல்லம் விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!
X

பிலிக்கல்பாளையம் ஏலச்சந்தையில், வெல்லம் விலை உயர்ந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், பாலப்பட்டி, மோகனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துவருகின்றனர்.

இந்த பகுதிகளில் விளையும் கரும்பை, ஜேடர்பாளையம், பிலிக்கப்பாளையம், கபிலர்மலை பகுதிகளைச் சேர்ந்த வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல சந்தையில் ஏலம் நடைபெறுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்துகொண்டு வெல்லத்தை கொள்முதல் செய்கின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,180 வரை ஏலம் போனது. இந்த வாரம் சிப்பம் ஒன்றுக்கு ரூ.1,220 வரை ஏலம் போனது. வெல்லம் விலை உயர்ந்துள்ளதால், வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 23 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’