/* */

ப.வேலூர் வல்லப விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் வல்லப விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ப.வேலூர் வல்லப விநாயகர் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா
X

சிறப்பு அலங்காரத்தில் வல்லப விநாயகர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள வல்லப விநாயகர் கோயிலில், கன்னிமூல கணபதி, பானலிங்க விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், மகா கால பைரவர் மற்றும் நவக்கிரக சன்னதிகளின் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. தற்போது மண்டல அபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். மேலும் கங்கை, யமுனை சரஸ்வதி மற்றும் கோதாவரி உள்ளிட்ட நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு புனித நீரைக் கொண்டு யாக சாலை பூஜை மற்றும் 108 வலம்பரி சங்காபிசேகம் நடைபெற்றது. இரவு வானவேடிக்கையும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வல்லப விநாயகர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தினர்.

Updated On: 13 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்