/* */

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு சக்கை எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

பிலிக்கல்பாளையம் அருகே வெல்லம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
X

பைல் படம்.

பரமத்திவேலூர் தாலுக்கா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது தோட்டத்தில் வெல்லம் தயாரிப்பு ஆலை அமைத்து கரும்பில் இருந்து வெல்லம் தயாரித்து வருகிறார். கரும்பு ஆலைக்கொட்டகையில் வெல்லம் தயாரிக்கும் பணிக்காக கரும்புச் சக்கைகளை அடுக்கி போர் வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு கரும்புச்சக்கையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். தகவல் கிடைத்ததும், நாமக்கல் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு சக்கைகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்