/* */

ப.வேலூர்: லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசல் பறிமுதல்

பரமத்திவேலூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ப.வேலூர்: லாரியில் கடத்தப்பட்ட 70 ஆயிரம் லிட்டர் போலி டீசல் பறிமுதல்
X

சித்தரிப்புக்காட்சி

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஐஜி ஆபாஷ்குமார், மண்டல எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பேரில், கோவை உட்கோட்ட டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில். சேலம் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நாமக்கல் எஸ்ஐ அகிலன், எஸ்எஸ்ஐ சத்தியபிரபு மற்றும் பறக்கும் படை தனித்துணை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர், ப.வேலூர் அருகில் உள்ள தேவனம்பாளையம் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், எவ்வித லைசென்ஸ் மற்றும் ஆவணம் இல்லாமல், சட்டவிரோதமாக 70 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பயோ டீசல் என்ற பெயரில் போலி டீசலை விற்பனைக்கு கொண்டு சென்ற லாரியையும், 70 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கலப்பட டீசலை கடத்திய லாரி உரிமையாளர் திருச்செங்கோட்டை சேர்ந்த மதிவாணன் (62) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 April 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்