/* */

சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து;ஒருவர் உயிரிழப்பு

சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சோழசிராமணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து;ஒருவர் உயிரிழப்பு
X

பரமத்திவேலூர் தாலுக்கா, சோழசிராமணி அருகே உள்ள சிறுபூலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் சக்திவேல் (20). நாமக்கல் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் லோகநாதன் (27). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஜமீன் இளம்பள்ளியில் நடைபெற்ற கோவில் விழாவிற்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

சோழசிராமணி அருகே வந்தபோது, நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள், ரோடு ஓரம் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சக்திவேல் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லோகநாதன் படுகாயம் அடைந்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!