மகளிர் குழுவினருக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு ஆலோசனை
நாமக்கல் அருகே மகளிர் குழுவினருக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், பெரியகவுண்டம்பாளையம் பஞ்சாயத்தில், ரூர்பன் திட்டம் தயாரிப்பது குறித்து மகளிர் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், 11 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 104 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, தையல் யூனிட், காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனை செய்தல், ஆடு மற்றும் கோழி வளர்த்து ஆட்டுக்கறி, கோழிக்கறி பேக்கிங் செய்து விற்பனை செய்தல், தீவன பயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்தல் மற்றும் பால் சம்மந்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தல் போன்ற தொழில்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட திட்ட இயக்குநர் வடிவேல், டிஆர்டிஏ திட்ட இயக்குநர் பிரியா, மகளிர் திட்டம், உதவி திட்ட அலுவலர் தெய்வம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.