/* */

நாமக்கல் பகுதியில் டூ வீலர் திருடிய 4 பேர் கைது; 6 வாகனங்கள் மீட்பு

நாமக்கல் நகரில், டூ வீலர்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 டூ வீலர்களை மீட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல் பகுதியில் டூ வீலர் திருடிய 4 பேர் கைது; 6 வாகனங்கள் மீட்பு
X

சித்தரிப்பு காட்சி

நாமக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் டூ வீலர்கள் திருட்டு அடிக்கடி நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்திரவின்பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில், போலீசார் அடிக்கடி வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், நாமக்கல்- துறையூர் ரோட்டில் உள்ள அண்ணாநகர் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 டூவீலர்களில், சந்தேகப்படும்படியாக வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி, விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் நாமக்கல் மேட்டுத்தெருவை சேர்ந்த பாலாஜி சாய் (23), எருமப்பட்டி பிரகாஷ் (21), சேந்தமங்கலம் தினகரன் (22) மற்றும் கணேசபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.

அவர்கள் ஓட்டி வந்தது, திருடப்பட்ட டூ வீலர்கள் என்பதும், நாமக்கல் பகுதியில், பல்வேறு இடங்களில் டூ வீலர்கள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையொட்டி, போலீசார் அவர்களை கைது செய்து, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருட்டுப்போன 6 டூ வீலர்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்