Begin typing your search above and press return to search.
அரசு பஸ் மோதியாதல் டூ வீலரில் சென்ற இளைஞர் உயிரிழப்பு
Two Wheeler Accident -நாமக்கல் அருகே அரசு பஸ் மோதியதால் டூ வீலரில் சென்ற இளைஞர் உயிரிழந்தார், மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது.
HIGHLIGHTS
Two Wheeler Accident -சேலத்தில் இருந்து, மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ் நாமக்கல் அருகே, வந்தபோது, கோழிக்கூண்டு தயாரிக்கும் நிறுவனத்தின் பணிபுரியும், வள்ளிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (20), அவரது நண்பர் விக்னேஷ் (22) ஆகிய இருவரும் டூ வீலரில் நாமக்கல் நோக்கி சென்றனர். வள்ளிபுரம் அருகே அவர்கள் சென்றபோது அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, நல்லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2