/* */

நாமக்கல் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகன பார்க்கிங் : போலீசார் பூட்டு

நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் பூட்டுப்போட்டு உரிமையாளர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக  வாகன பார்க்கிங் : போலீசார் பூட்டு
X

நாமக்கல்லில், போக்குவரத்துக்கு இடையூறளாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்த காருக்கு, போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டு பூட்டினர்.

நாமக்கல் மெயின் ரோடு மற்றும் சேலம் ரோடு பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி ரோடு, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக மெயின் ரோட்டுக்கு செல்ல முடியாமல், பார்க் ரோட்டில் திருப்பி விடப்பட்டு, கோட்டை ரோடு வழியாக சென்று வருகின்றன.

இந்நிலையில், நாமக்கல் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதை ஆய்வு செய்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியன், எஸ்ஐக்கள் முருகேசன், பெரியசாமி, நேரு உள்ளிட்டோர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர்கள், கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நகர முடியாதவாறு வீல் லாக் என்ற பூட்டைப்போடு பூட்டி வைத்தனர். பின்னர் அதன் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Updated On: 3 July 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  4. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  5. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  6. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  7. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  8. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  9. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  10. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...