Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 80 பேருக்கு கொரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 46,055 ஆக உயர்ந்துள்ளது. இன்று 87 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 44,798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 823 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாவட்டத்தில், இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இறக்கவில்லை. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 434 பேர் உயிரிழந்துள்ளனர்.