நாமக்கல் மாவட்டத்தில் இன்று 57 மையங்களில் கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 15 வட்டாரங்களில் உள்ள 57 மையங்களில் 10 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் விபரம்:
நாமக்கல் வட்டாரம்: எர்ணாபுரம், குப்பம்பாளையம், கீரம்பூர் தொடக்கப்பள்ளிகள், நாமக்கல் நகராட்சி ஏ.எஸ்.பேட்டை திப்பு மஹால், பெரியப்பட்டி நகராட்சிப் பள்ளி, பரமத்திரோடு அண்ணா நகர் தொடக்கப்பள்ளி, கொசவம்பட்டி தேவேந்திரபுரம் நகராட்சி சமுதாயக்கூடம், கொண்டிசெட்டிப்பட்டிஅரசு தொடக்கப்பள்ளி.
திருச்செங்கோடு வட்டாரம்: சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், திருச்செங்கோடு பஸ் நிலையம்.
பள்ளிபாளையம் வட்டாரம்: படவீடு டவுன் பஞ்சாயத்து அலுவலகம், விஎஸ்எம் மில், வேலாத்தாள் மில், பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி, பல்லவா மில், என்ஆர்ஜிஎஸ் வளாகம், ஹைடெக் பார்க்.
சேந்தமங்கலம் வட்டாரம்: சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, காளப்பநாய்க்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்.
நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.
மல்லசமுத்திரம் வட்டாரம்: சூரியகவுண்டம்பாளையம், சப்பையபுரம், மேல்கல்பாளையம், ராமாபும் அரசு தொடக்கப்பள்ளிகள்.
வெண்ணந்தூர் வட்டாரம்: வெண்ணந்தூர் 2வது வார்டு சுளுக்கப் பிள்ளையார் கோயில்.
கொல்லிமலை வட்டாரம்: கருமூர் அரசு தொடக்கப்பள்ளி,வாசலூர்ப்பட்டி மேல்நிலைப்பள்ளி, ஊமத்தங்காடு கிராமம், நத்துக்குழிப்பட்டி சமுதாயக்கூடம்.
இராசிபுரம்வட்டாரம்: காக்காவேரி முத்தாயம்மாள் கலை கல்லூரி,முத்தாயம்மாள் நினைவு கலைக்கல்லூரி, கேவிப்பட்டி அங்கன்வாடிமையம், சி.எஸ்.புரம் உயர்நிலைப்பள்ளி, கருப்பட்டி அங்கன்வாடி மையம், ராசிபுரம் நகராட்சிஅக்ரஹாரம் மஹால், துளசி சிறப்பங்காடி.
எருமப்பட்டி வட்டாரம்: செவந்திப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம்.
மோகனூர் வட்டாரம்: மேல்பேட்டப்பாளையம் கிராமம், லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கல்லூரி, பேட்டப்பாகளையம் ஆர்.சி. பள்ளி, மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையம்.
புதுச்சத்திரம் வட்டாரம்: திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், ஏழூர் ஆரம்ப சுகாதார நிலையம், புதுச்சத்திரம் என்ஆர்ஜிஇஎஸ் வளாகம்.
கபிலர்மலை வட்டாரம்: புங்கம்பாளையம் சமுதாயக்கூடம், சியாம்பாளையம், அருணகிரிபாளையம் தொடக்கப்பள்ளிகள்.
பரமத்தி வட்டாரம்: நல்லூர், கூடச்சேரி, பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொண்டரசம்பாளையம், கோதூர் தொடக்கப்பள்ளிகள், ப.வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளி.
எலச்சிபாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நல்லகுமரம்பாளையம், கொண்ணையார் , புதூர் மண்டகாபாளையம் அரசு தொடக்கப்பள்ளிகள்.
ஆகிய 57மையங்களில் இன்று கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத்துறையினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.