/* */

கொல்லிமலையில் மின்தடையை சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

namakkal news, namakkal news today-கொல்லிமலையில் சேளூர் நாடு கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், மின்சார விநியோகத்தை சீரமைக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் மின்தடையை சீரமைக்க  கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
X

namakkal news, namakkal news today- கொல்லிமலையில் மின்சாரத் தடையை சீரமைக்க கோரி, திரளான மலைவாழ் மக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

namakkal news, namakkal news today- கொல்லிமலையில் சேளூர் நாடு கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், தங்கள் பகுதியில் 2 மாதங்களாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை சீரமைக்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கை மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சேளூர் நாடு கிராமத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆட்சியர் உமாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

நாமக்கல் மாவட்டம், கொல்லிமøயில் உள்ள சேளூர்நாடு கிராமத்தில், மின்சார டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதால், கடந்த 2 மாதமாக மின்சாரம் விநியோகம் இல்லை. இதனால் சேளூர் நாடு பகுதி முழுவதும் மக்கள் இரவு தோறும் இருட்டில் தவித்து சிரமப்பட்டு வருகிறோம். பகல் நேரத்தில் மின்விசிறி இயக்க முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இது குறித்து மின்சார வாரிய அலுவலர்களிடம் தகவல் சொல்லியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக மின் இணைப்பு வழங்கி, சேளூர் நாடு இருளில் மூழ்கி இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் கொல்லிமலை நெடுங்கா புளிப் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் வழியாக செல்லக்கூடிய மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால், ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அச்சத்துடன் உள்ளனர். மின்சார ஒயரை மாற்றி, பள்ளி சுற்று சுவருக்கு வெளியில் அமைத்து தர வேண்டும் என்றும், மேலும் மின்கம்பம் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேளூர் நாடு கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மனுவில், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 July 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  2. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  7. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  8. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  10. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...