Begin typing your search above and press return to search.
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எருமப்பட்டியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
எருமப்பட்டியில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
ஆசிரியர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் 8 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் கனகலிங்கம் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சங்கர், ஒன்றியச் செயலாளர் செல்வராசு,பாஸ்கரன், தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க நிர்வாகத்தை சீரமைக்கக் கோரி 8 அம்ச கோரிக்கைகள வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். முடிவில் ஒன்றியப் பொருளாளர் துரைராசு நன்றி கூறினார்.