நாமக்கல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த டீ மாஸ்டர் பலி
நாமக்கல் அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த டீ- மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் ஆர்.பி. புதூர் சாவடி தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (55). இவர் மோகனூர் பகுதியில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்து, பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முன்தினம் மனோகரன் தங்கியிருந்த அறையின் மாடியில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவருடைய மகன் வினோத்குமார் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், சிறப்பு எஸ்ஐ சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.