Begin typing your search above and press return to search.
நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அக். 2ல் மூடல்
நாமக்கல் மாவட்டத்தில், அக். 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 2ம் தேதி சனிக்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்ககடைகள், லைசென்ஸ் பெற்ற பார்கள் ஆகியவற்றை மூடிவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி, வரும் 2ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற பார்களை மூடி வைக்கவேண்டும். டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்ற பார்கள் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.