/* */

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல்லில் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

டாஸ்மாக் விற்பனையாளர் கொலையை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
X

ஒரகடத்தில்,  டாஸ்மாக் கடை விற்பனையாளர் கொலையை கண்டித்து நாமக்கல்லில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4ம் தேதி இரவு, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த துளசிதாஸ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது தமிழக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும், இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வாரிசுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், மர்ம நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த மற்றொரு விற்பனையாளர் ராமுவிற்கு, உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து, அனைத்து மருத்துவ செலவையும் அரசே ஏற்கவேண்டும், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில், அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் திரளான, டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  3. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  5. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  6. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  8. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  9. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  10. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...